வெள்ளிச்சந்தை அருகே ஆட்டோ ஓட்டும் போது நெஞ்சு வலி ஏற்பட்டு டிரைவர் பலி

வெள்ளிச்சந்தை அருகே ஆட்டோ ஓட்டி செல்லும் போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு கீழே விழுந்து டிரைவர் பலியானார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இராஜாக்கமங்கலம் குறண்டி பகுதியை சேர்ந்தவர் கோபிராஜ்(52). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க வெள்ளிச்சந்தை அருகே பேயோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
 
பேயோடு பத்திரகாளி கோயில் அருகே வரும்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து கோபிராஜ் மகன் அஜித் வெள்ளிச்சந்தை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இதனடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

Previous News Next News