முட்டத்தில் மது கிடைக்காத ஏக்கத்தில் முதியவர் தற்கொலை

முட்டத்தில் குடிக்க மது கிடைக்காததால் முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
முட்டம் ஜார்ஜியார் தெருவை சேர்ந்தவர் மிக்கேல் அடிமை (வயது 60). கடந்த 3 ஆண்டுகளாக வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.

மிக்கேல் அடிமைக்கு குடிபழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், தற்போது குடிக்க மது கிடைக்காததால் சாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்து வீட்டின் உள்ளே தனது வேட்டியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக அவரது மனைவி அல்போன்சாள் (வயது 53) வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Post a Comment

Previous News Next News