மணவாளக்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம்: பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
06-02-2016
மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பரப்பற்று பனமூட்டு இசக்கி அம்மன் கோவிலில் ரூ.5 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தையும் பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
விழாவில் பேரூராட்சி தலைவர் ஜோஸ்பின் ரீட்டா, செயல் அலுவலர் லிவி, வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மண்டைக்காடு பரப்பற்றில் ரூ.8லட்சம் செலவில் கட்டப்பட உள்ள சமுதாய நலக்கூடத்துக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் ஊர் தலைவர் ராமநாதன், செல்லநாடார், முருகன், அருள் செல்வன், செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:
Manavai News