மணவாளக்குறிச்சி, சாத்தன்விளை முத்தாரம்மன்கோவில் கும்பாபிஷேக விழா
26-03-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள சாத்தன்விளை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜைகளும், 10 மணிக்கு மகாபூர்ணஹூதியும், 10.15 மணிக்கு கடங்கள் யாகசாலையை விட்டுபுறப்பாடும், 11 மணிக்கு முத்தாரம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும், அபிஷேகங்களும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்செய்தனர்.
விழாவுக்கு ஊர் தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் ஊர் தலைவர் அரிகோபால் முன்னிலை வகித்தார். வெள்ளிமலை பேரூராட்சி தலைவர் வசந்தா முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வெள்ளிமலை இந்து தர்மவித்யா பீட சுவாமிகள் சிவாத்மானந்தஜி மகராஜ், பாலகிருஷ்ணானந்த மகராஜ் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.
பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு மகேஸ்வரர் பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 8.30 மணிக்கு பட்டிமன்றமும் நடந்தது.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்