மணவாளக்குறிச்சி காவல்நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
22-01-2015
மணவாளக்குறிச்சி காவல்நிலையத்தில் வைத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. போக்குவரத்து விதிகள் வாகனம் ஓட்டும் போது கவனிக்க வேண்டியவை, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், அதிவேகமாக வாகனம் ஓட்டுவதில் ஏற்படும் விபத்துக்கள் போன்ற சாலை விதிகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ், என்எஸ்எஸ் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் நாகேஷ், மணவாளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் என்எஸ்எஸ் திட்ட மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:
Manavai News