மணவாளக்குறிச்சியில் புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு பேரணி
13-01-2015
மணவாளக்குறிச்சி பேரூராட்சி சார்பில், பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளியில் புகையில்லா பொங்கல் கொண்டாட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குப்பைகள் எரிப்பதை தவிர்த்து அதை பயனுள்ளதாக மாற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இதில் மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜோஸ்பின் ரீட்டா, செயல் அலுவலர் சங்கர், தலைமை ஆசிரியர் ஜாண் கிறிஸ்டோபர், ஆசிரியர் கோபாலபிள்ளை மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:
Manavai News