மணவாளக்குறிச்சியில் இஸ்லாமிய சகோதரர்கள் நடத்தும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மணவாளக்குறிச்சியில் இஸ்லாமிய சகோதரர்கள் நடத்தும் 
விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
23-02-2013
மணவாளக்குறிச்சியில் இஸ்லாமிய சகோதரர்கள் நடத்தும் இஸ்லாமிய மார்க்க விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நாளை (24-02-2013) இரவு 8.45 மணிக்கு மணவாளக்குறிச்சி இஸ்லாமிய பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது.

பொதுக்கூட்டத்தில் நாகர்கோவில் கலாச்சாரக்கழகம் இமாம் எம்.ஏ. சௌக்கத்அலி உஸ்மானி அவர்கள் “தலைமை இமாம், நிர்வாகிகள், பெற்றவர்கள், பெண்கள், இளைஞர்கள் இவர்களின் பொறுப்பு” என்ற தலைப்பில் மார்க்க சிறப்புரை வழங்குகிறார்.
தொடர்ந்து சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் எஸ். சம்சுதீன் காஸிமி அவர்கள் “இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் கிரிமிகள்” என்ற தலைப்பில் பேசுகிறார். இந்நிகழ்ச்சியை மணவாளக்குறிச்சி இஸ்லாமிய சகோதரர்கள் நடத்துகின்றனர்.

Post a Comment

Previous News Next News